
செய்திகள் உலகம்
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் மீது இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வாயிலாக தங்கள் தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக பாகிஸ்தான் தொடர்பு அமைச்சர் கூறினார்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய வேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.
அடுத்த 24 அல்லது 36 மணிநேரத்திற்குள் இந்தியா மாபெரும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் அரசு எண்ணுவதாக அந்நாட்டின் அமைச்சர் சொன்னார்.
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட வேளையில் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியது.
இருப்பினும், இந்த தாக்குதலை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் நிலையான மற்றும் சுயேட்சை விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இஸ்லாமாபாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm