
செய்திகள் உலகம்
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
நியூயார்க்
டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர் எழுதிய கடிதம் ஏலத்தில் 300,000 பவுண்டுக்கு விற்பனையானது.
கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியின் (Colonel Archibald Gracie) கடிதத்தை அடையாளம் தெரியாத ஒருவர் வாங்கினார்.
அது சுமார் 60,000 பவுண்டுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைவிட ஐந்து மடங்கு அதிகத் தொகைக்கு அது விலைபோனது.
கடிதத்தில் தாம் சொகுசுக் கப்பலின் தரத்தை நிர்ணயிப்பதற்கு முன் தமது பயணத்தின் முடிவுக்குக் காத்திருப்பதாக கர்னல் கிரேசி எழுதியிருப்பார்.
வரவிருந்த பேரிடரை அவர் முன்கூட்டியே கணித்ததாகப் பலரும் கருதுகின்றனர்.
அந்தக் கடிதம் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி எழுதப்பட்டது. 5 நாள்கள் கழித்து கப்பல் பனிப்பாறை மீது மோதி மூழ்கியது.
டைட்டானிக்கில் எழுதப்பட்ட கடிதங்களில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட கடிதம் கர்னல் கிரேசி எழுதியது.
டைட்டானிக்கில் நியூயார்க்கிற்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 2,200 பயணிகளில் கர்னல் கிரேசியும் ஒருவர். அவர் உயிர் பிழைத்தார்.
பேரிடரில் 1,500க்கும் அதிகமானோர் மாண்டனர்.
ஆதாரம்: The New york Times
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm