
செய்திகள் மலேசியா
லஞ்சம் பெற்றதாக கெடா எம்ஏசிசியின் இரு அதிகாரிகள் கைது
பெட்டாலிங் ஜெயா
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) கெடா மாநில பண்யாளர்களான இரண்டு அதிகாரிகள், லஞ்சம் பெற்றதற்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்காக ஒரு நபரிடமிருந்து, சம்பந்தப்பட்ட இருவரும் RM1,500 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை மதியம், அலோர் ஸ்டார் எம்ஏசிசி அலுவலகத்தில் வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில்காந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி வட்டாரம் கூறியது.
அலோர் ஸ்டார் நீதிமன்றத்தில், எம்ஏசிசி கோரிக்கையின் பேரில், நிதிபதி சிதி நூர்ஹிதாயா நூர், இருவரையும் ஐந்து நாட்கள் தடுத்து வைக்க அனுமதி வழங்கினார்.
கெடா எம்ஏசிசி இயக்குநர் அகமட் நிஜாம் இஸ்மாயில், இந்த கைது சம்பவத்தைக் உறுதிப்படுத்தியதோடு, 2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் 16(a)(b) பிரிவின் கீழ், லஞ்சம் கோருதல் மற்றும் பெறுதல் குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am