
செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
கோத்தாபாரு:
நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 மில்லியன் வாகனங்கள் கிளந்தனுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளந்தான் சாலைப் போக்குவரத்துத் துறை (ஜேபிஜே) இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா இதனை கூறினார்.
இந்த நுழைவு கிளந்தானுக்குள் நுழையும் மூன்று இடங்களான பாசிர் பூத்தே, குவா மூசாங், ஜெலி ஆகியவற்றை உள்ளடக்கியது.
பெரும்பாலான மக்கள் விடுமுறையில் இருப்பதால் மார்ச் 28 முதல் அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.
இதன் அடிப்படையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 மில்லியன் வாகனங்கள் விரைவில் கிளந்தானுக்குள் நுழையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
நோன்பு பெருநாளுக்கு முன்பு ஒவ்வொரு முறையும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கிளந்தானுக்குள் நுழைவது ஒரு சாதாரண சூழ்நிலையாகும்.
எனவே, எந்தவொரு தேவையற்ற சம்பவங்களையும் தவிர்க்க எப்போதும் கவனமாக இருக்குமாறு அனைத்து சாலை பயனர்களுக்கும் நினைவூட்டுகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm