
செய்திகள் மலேசியா
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
கோலாலம்பூர்:
ரமலான் மாதத்தில் சாப்பிட்டதற்காக ஒரு சீனரை பலமுறை அறைந்த ஒரு ஆடவரின் செயலை தேசிய ஒருமைப்பாட்டுத் துறைஅமைச்சர் ஆரோன் அகோ டாகாங் கண்டித்தார்.
அவரின் இச்செயல் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தின் உணர்வைப் பிரதிபலிக்கவில்லை.
எனவே, ருக்குன் நெகாராவின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரு நாட்டில் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது.
இன நல்லிணக்கத்தை சேதப்படுத்தும் வன்முறை, பாகுபாடு, பாரபட்சம் ஆகியவற்றை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
மேலும் ஒற்றுமை தொடர்பான பிரச்சினைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
மலேசியர்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்தவொரு சம்பவத்தையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm