
செய்திகள் மலேசியா
ஜசெகவின் தலைவரானார் கோபிந்த் சிங்; குவான் எங் ஆலோசகர், அந்தோனி லோக் செயலாளராக நீடிக்கிறார்
ஷா ஆலம்:
ஜசெகவின் புதிய தலைவராக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் பொறுப்பேற்றுள்ளார்.
ஜசெக கட்சித் தேர்தல் இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்று முடிந்தது.
தேர்தலில் வெற்றி பெற்ற 30 பேரை கொண்டு புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.
இதில் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற கோபிந்த் சிங் ஜசெகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.
வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோங் சியெங் ஜென், தியோ நீ சிங், இங் சூயி லிம், ஷாரெட்ஸான் ஜோஹன், ஜே. அருள்குமார் ஆகியோர் உதவித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ, புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் ஆகிய மூன்று துணை பொதுச் செயலாளர்களாக தேர்வு பெற்றனர்.
முன்னாள் ஜசெக தலைவர் லிம் குவான் எங் கட்சியின் தேசிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am
ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு
March 17, 2025, 10:51 am
டிஏபி உச்சமன்ற தேர்தல்: வெற்றியை தழுவிய ஒரே இந்திய பெண் கஸ்தூரி பட்டு
March 17, 2025, 10:30 am
தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தலை தடுக்க மலேசியா - இந்தியா பேச்சுவார்த்தை
March 17, 2025, 10:30 am