
செய்திகள் மலேசியா
சண்டையில் இரண்டு இந்திய ஆடவர்கள் வெட்டிக் கொலை: கிள்ளான் செந்தோசாவில் பரபரப்பு
கிள்ளான்:
கிள்ளான் தாமான் செந்தோசாவில் நடந்த சண்டையில் இரண்டு இந்திய ஆடவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
தெற்கு கிள்ளான் மாவட்ட போலிஸ் தலைவர் சா ஹூங் ஃபாங் இதனை கூறினார்.
நேற்று இரவு 10.50 மணியளவில் நடந்த சண்டையில் காயமடைந்தவர்கள் குறித்து போலிஸுக்கு அழைப்பு வந்தது.
தாமான் செந்தோசாவின் ஜாலான் உலுபலாங் 28இல் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வளாகத்தில் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை கத்தியால் வெட்டினர்.
அவர்களில் ஒருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
அவர் சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு வளாகத்தில் இறந்து கிடந்தது உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மரணமடைந்தவர்கள் 36, 38 வயதுடைய உள்ளூர் ஆடவர்களாவர். அவர்களில் ஒருவர் குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து போலிசார் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.
இந்தச் சண்டை குண்டர் கும்பல் சம்பந்தப்பட்டதா என்பதையும் போலிசார் இன்னும் விசாரித்து வருவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am
ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு
March 17, 2025, 10:51 am
டிஏபி உச்சமன்ற தேர்தல்: வெற்றியை தழுவிய ஒரே இந்திய பெண் கஸ்தூரி பட்டு
March 17, 2025, 10:30 am
தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தலை தடுக்க மலேசியா - இந்தியா பேச்சுவார்த்தை
March 17, 2025, 10:30 am