நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் எம்.ஏ.சி.சியிடம் வாக்குமூலம் வழங்குவார் 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாளை மீண்டும் வாக்குமூலம் அளிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருகை புரியவுள்ளதாக எம்.ஏ.சி.சி வட்டாரம் தெரிவித்தது 

தாம் எதிர்நோக்கியுள்ள ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கூடுதல் விளக்கங்களையும் ஆதாரங்களையும் வழங்குவதற்காக பெரா நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எம்.ஏ.சி.சிக்கு உதவுவார் என்று சொல்லப்படுகிறது 

எம்.ஏ.சி.சி அதிகாரிகள் அவரிடமிருந்து விளக்கங்களைப் பெற்ற வேளையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் 

முன்னதாக, ஊழல் நடவடிக்கை, கள்ளப்பண பரிமாற்றம் ஆகியவை உட்படுத்திய 170 மில்லியன் ரிங்கிட் ஊழல் விவகாரம் தொடர்பாக டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சந்தேக நபராக வகைப்படுத்தப்படுவதாக கடந்த மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டிருந்தார் 

எம்.ஏ.சி.சி இதுவரை 36 பேரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset