
செய்திகள் உலகம்
கால்சட்டையில் ஆமையை மறைத்து வைத்த பயணி
நியூ ஜெர்சி:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி விமான நிலையத்தில் ஆமை ஒன்றை கால்சட்டையில் மறைத்து வைத்திருந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் மீது அதிகாரி பாதுகாப்புச் சோதனை நடத்தியபோது அவரது கால்சட்டையில் பொருள் ஒன்றை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அதிகாரி அதைப் பற்றி கேட்டபோது, 12 செண்ட்டிமீட்டர் நீளமுள்ள ஆமையை ஆடவர் தமது கால்சட்டையிலிருந்து வெளியே எடுத்தார்.
சிவப்பு நிறக் காதுகள்கொண்ட அந்த வகை ஆமை பிரபலபான ஒரு செல்லப்பிராணி என்றார்.
ஆமை அவரது செல்லப்பிராணியா அல்லது அதனை அவர் ஏன் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை.
அதிகாரிகள் ஆமையைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையக் காவல்துறையினர் ஆடவரைத் தடுத்து வைத்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
உயிருள்ள விலங்கினைக் கால்சட்டையில் மறைத்து வைக்க பயணி ஒருவர் முயன்றுள்ளது இதுவே முதன்முறையாக இருக்கலாம் என்று போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:55 am
கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றார்
March 15, 2025, 10:55 am
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு
March 14, 2025, 1:38 pm
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 13, 2025, 12:50 pm