
செய்திகள் உலகம்
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை தெரிவு
கொழும்பு:
உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார விஞ்ஞானம், சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறியீட்டில் பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக 12வது வருடாந்த பயங்கரவாத குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குறியீடு பூச்சியத்துடன், இலங்கை 63 நாடுகளுடன் குறியீட்டில் மிகக் குறைந்த இடத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி முதல் மூன்று இடங்களில் புர்கினா ஃபாஸோ, பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.
இந்த அறிக்கையின்படி பயங்கரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ள நாடாக உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100 ஆவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்திலிருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய வலயத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 12:35 pm
தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தால் பரபரப்பு
March 14, 2025, 12:32 pm
அங்கோர் வாட் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
March 14, 2025, 7:44 am
சவுதி வழங்கிய 50 மெட்ரிக் டன் பேரீச்சம்பழங்கள் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கும் பகிரப்பட்டது
March 13, 2025, 4:55 pm
கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
March 13, 2025, 12:50 pm
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: இலங்கை முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am