
செய்திகள் உலகம்
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
துபாய்:
துபாயின் சாலைகள், போக்குவரத்து ஆணையம் (RTA) ரமலான் மாதத்தின் போது மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நிலையங்களில் ரமலான் 24 ஆம் தேதி வரை இலவச இஃப்தார் உணவு விநியோகிக்கப்படும் என்றும், ‘noon Food’ நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம் இந்த முயற்சி சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பஸ் டிரைவர்கள், டெலிவரி ரைடர்ஸ், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவை வழங்குவதன் மூலம் ரமலான் மாதத்தில் அருளையும் ஒற்றுமையையும் பரப்புவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மெட்ரோ நிலையங்கள், அவற்றின் தலைமையகம் மற்றும் கடல் போக்குவரத்து மையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 20 சமூக நிகழ்வுகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளையும் RTA நடத்துவதாகக் கூறப்படுகின்றது.
இதே போல பல தொண்டு நிறுவனங்களும் உணவகங்களும் ரமலான் மாதத்தில் இலவச இஃப்தார் உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆதாரம்: Khaleej
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm