
செய்திகள் உலகம்
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
துபாய்:
துபாயின் சாலைகள், போக்குவரத்து ஆணையம் (RTA) ரமலான் மாதத்தின் போது மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ நிலையங்களில் ரமலான் 24 ஆம் தேதி வரை இலவச இஃப்தார் உணவு விநியோகிக்கப்படும் என்றும், ‘noon Food’ நிறுவனத்துடனான கூட்டாண்மை மூலம் இந்த முயற்சி சாத்தியமானது என்றும் தெரிவித்துள்ளது.
மெட்ரோ பயணிகள் மற்றும் பஸ் டிரைவர்கள், டெலிவரி ரைடர்ஸ், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவை வழங்குவதன் மூலம் ரமலான் மாதத்தில் அருளையும் ஒற்றுமையையும் பரப்புவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மெட்ரோ நிலையங்கள், அவற்றின் தலைமையகம் மற்றும் கடல் போக்குவரத்து மையங்கள் போன்ற முக்கிய இடங்களில் 20 சமூக நிகழ்வுகள் மற்றும் தொண்டு நடவடிக்கைகளையும் RTA நடத்துவதாகக் கூறப்படுகின்றது.
இதே போல பல தொண்டு நிறுவனங்களும் உணவகங்களும் ரமலான் மாதத்தில் இலவச இஃப்தார் உணவுகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆதாரம்: Khaleej
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 10, 2025, 10:36 am