
செய்திகள் உலகம்
லண்டன், நியூயார்க் போன்ற உலக நகரங்களைப் போல் சிங்கப்பூர் வளர வேண்டுமென்றால் புதியவர்கள் சிங்கப்பூரில் குடியேற வேண்டும்: முன்னாள் பிரதமர் லீ
சிங்கப்பூர்:
முன்னாள் சிங்கப்பூர் பிரதமரும் மூத்த அமைச்சருமான லீ சியன் லூங் (Lee Hsien Loong) புதியவர்கள் சிங்கப்பூரில் குடியேறுவது புதிய வாய்ப்புகளையும் புதிய சிந்தனைகளையும் கொண்டுவரும் என்று கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர் தன்னை மூடிக்கொண்டால் நல்ல வாய்ப்புகள் நழுவிப் போய்விடும் என்று அவர் சொன்னார்.
புதியவர்கள் குடியேறுவது சிங்கப்பூரின் உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது என்றார் அவர்.
நன்யாங் தொழிற்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற டெக் கீ (Teck Ghee) குடியிருப்பாளர்கள் நிகழ்ச்சியில் திரு லீ பேசினார்.
பொருளாதாரம் வளர்ச்சி பெறவேண்டுமானால் புதியவர்கள் தேவை என்றார் அவர்.
புதியவர்களோடு எண்ணிக்கை மட்டும் வளர்வதில்லை புதிய சிந்தனைகளும் வளர்கின்றன என்று மூத்த அமைச்சர் லீ சொன்னார்.
லண்டன், நியூயார்க், ஷங்ஹாய் போன்ற உலக நகரங்கள் அப்படித்தான் வளர்ந்திருக்கின்றன. சிங்கப்பூர் ஒதுங்கி நின்றால் அது பின்னடைந்துவிடும்.
பெரிய நாடுகளுக்கு இயற்கை வளங்கள் உள்ளன. சிங்கப்பூருக்கு மக்கள் வளமே உள்ளது என்று முன்னாள் பிரதமர் லீ கூறினார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm