
செய்திகள் உலகம்
குவைத் விமான நிலையம் திடீரென மூடப்பட்டது
குவைத்:
குவைத் விமான நிலையம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டதால், அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
குவைத் விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்ட உள்வரும் விமானங்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக அண்டை விமான நிலையங்களுக்கு (சவுதி அரேபியாவுக்கு) திருப்பி விடப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்து விமான நிலையம் மீண்டும் திறப்பதற்கான காலக்கெடுவை (எப்போது இயக்கத்துக்கு வரும் என்பதை) அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. மேலும் பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு மறுதிட்டமிடுதல், மாற்று ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்புகளை சரிபார்க்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த சில நாள்களாக அந்நாட்டில் கன மழை பெய்து வரும் நிலையில், தொழில்நுட்பக் கோளாரினால் விமான சேவை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am