
செய்திகள் மலேசியா
சமிஞ்சை விளக்குக்கு அருகே விபத்து: இருவர் மரணம், மூவர் காயம்
சிரம்பான்:
சமிஞ்சை விளக்குக்கு அருகே நிகழ்ந்த விபத்தில் இருவர் மரணமடைந்த வேளையில் மூவர் காயமடைந்தனர்.
நேற்று இரவு இங்குள்ள மாதாஹரி ஹைட்ஸ் அருகே உள்ள சமிஞ்சை விளக்கு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒரு கார் மீது மோதிய விபத்துக்குள்ளானது.
இரவு 8.30 மணியளவில் நடந்த சம்பவத்தில் மோடனாஸ் கிறிஸ் மோட்டாரின் பயணித்த 15, 16 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் ஹோண்டா ஜேஸ் வகை கார் கட்டுப்பட்டை இழந்து சமிஞ்சை விளக்கு பகுதியில் நின்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மோதி தள்ளியுள்ளது.
இதனால் கடுமையான காயங்களுக்கு இலக்கான மோட்டாரில் பயணித்தவர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேலும் காரில் பயணித்த இருவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஹட்டா சே டின் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 1:41 pm
புதிய கெஅடிலான் தலைமைத்துவத்திற்கு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் வாக்களித்தார்
May 23, 2025, 1:37 pm
ஊதப்படாத பலூனை விழுங்கியதால் உயிருக்கு போராடிய சிறுவன்
May 23, 2025, 1:32 pm
நெகாராகூ பாடத் தெரியாததால் குடிநுழைவு அதிகாரியிடம் சிக்கிய சட்டவிரோத அந்நிய நாட்டினர்
May 23, 2025, 12:21 pm
23 மே 1997: எவரெஸ்ட் உச்சியில் முதல் முறையாக மலேசியக் கொடி பறந்த நாள்
May 23, 2025, 11:53 am