நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஊதப்படாத பலூனை விழுங்கியதால் உயிருக்கு போராடிய சிறுவன்

கூலிம்:

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது  ஊதப்படாத பலூனை விழுங்கிய சிறுவன் ஒருவன் உயிருக்கு போராடினான்.

ஒரு குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி, ஒரு தாய்க்கு பதட்டமாக மாறியது.

நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் நூருல் ஹுதா சுல்கைரி பகிர்ந்து கொண்டதாவது, 

மிகுந்த மகிழ்ச்சியுடன் திட்டமிடப்பட்ட ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றி கொண்டிருந்தது.

நானும் என் கணவரும் விருந்தினர்களை உபசரிப்பதில் மும்முரமாக இருந்தோம்.

அதே நேரத்தில்  என் மகன் உவைஸ் அல்-ஃபதே தனது சிறந்த நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவர் என் மேஜையில் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் வீட்டைச் சுற்றி ஓடத் தொடங்கினான்.

திடீரென உவைஸிடம் ஏதோ தவறு இருப்பதாக தனது மைத்துனி உணர்ந்தார். உவைஸுக்கு ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என மைத்துனி கூறினார்.

ஆனால் அவனின் உடல் நீல நிறமா மாறியது. அந்த நேரத்தில், அவரது இதயம் நின்றுவிட்டது.

உவைஸ் உணவு மூச்சுத் திணறுவதாக நினைத்து அவரது கணவரும் ஒரு அறிமுகமானவரும் அவசர உதவி வழங்க முயன்றனர்.

சிபிஆர் செய்யப்பட்டது. ஆனால் அவை தோல்வியடைந்தன. உடனே அவர்கள் உவைஸை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இதயத் துடிப்பு இல்லாததால், தனது மகன் மீண்டும் உயிரோடு வருவதற்கான வாய்ப்புகள் 50-50 என மதிப்பிடப்பட்டுள்ளதாக நூருல் ஹுடா விளக்கினார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், உவைஸின் சுவாசப் பாதையில் ஒரு பலூன் இருப்பதைக் கவனித்தனர்.

மருத்துவர்கள் உடனடியாக பலூனை அகற்றிவிட்டு சிபிஆரைத் தொடர்ந்தனர்.

இறுதியில் என் மகனின் உயிரை  அவர்கள் மீட்டுத் தந்தனர்.  என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset