
செய்திகள் உலகம்
தாய்லாந்து யாலாவில் வெடிக்குண்டு வெடித்தது: 7 போலிசார் உட்பட 23 பேர் காயம்
யாலா:
தாய்லாந்து யாலாவில் வெடிக்குண்டு வெடித்ததில் 7 போலிசார் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.
பன்னாங் சாட்டா போலிஸ் தலைவர், ரானோன் சுராவிட் இதனை தெரிவித்தார்.
யாலா மாநிலத்தின் பன்னாங் சாடா மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி அருகே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8.20 மணிக்கு நடந்தது.
அதிகாரிகளை குறிவைத்து ஆயுதமேந்திய குழுவால் இது நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில் போலிஸ் அதிகாரிகள் இரண்டு வாகனங்களில் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
போலிஸ் வாகனம் பல்பொருள் அங்காடிக்கு வந்தபோது, அருகிலுள்ள பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு குண்டு திடீரென வெடித்தது.
அது ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி செயல்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஏழு போலிஸ் அதிகாரிகள், 16 பொதுமக்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக பன்னாங் சாதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பில் போலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm