நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலஸ்தீனம் விற்பனைக்கு இல்லை: அதிபர் அறிவிப்பு

காசா:

பாலஸ்தீனம் விற்பனைக்கு இல்லை என்று அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன குடியிருப்பாளர்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.

கடந்த புதன்கிழமை மத்திய மேற்குக் கரையின் ரமல்லாவில் நடைபெற்ற ஃபத்தா மத்திய குழுக் கூட்டத்தில் தனது தொடக்க உரையில் அவர் இவ்வாறு கூறியதாக அதிகாரப்பூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முடிவடைந்த அடிஸ் அபாபாவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்றதைக் குறிப்பிட்ட அப்பாஸ்,

பாலஸ்தீனியர்களை இடம்பெயரச் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் எதிரான  உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

பாலஸ்தீனம் விற்பனைக்கு இல்லை.

மேலும்  காசா, மேற்குக் கரை அல்லது ஜெருசலேம் உட்பட அதன் பிரதேசத்தின் எந்தப் பகுதியும் விட்டுக்கொடுக்கப்படாது என்ற உறுதியான பாலஸ்தீன நிலைப்பாட்டை மீண்டும்  அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset