செய்திகள் மலேசியா
99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்
கோலாலம்பூர்:
99 ஸ்பீட்மார்ட் நிறுவனர் இப்போது மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
99 ஸ்பீட்மார்ட் சில்லறை விற்பனைச் சங்கிலியின் நிறுவனராக லீ தியாம் வா விளங்குகிறார்.
மலேசியாவின் 10 பணக்காரர்களில் ஒருவராக, 17.6 பில்லியன் சொத்துக்களையும் அவர் கொண்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு நன்யாங் சியாங் பாவ் பணக்கார தனிநபர்கள் பட்டியலின்படி அவர் ஏழாவது இடத்திற்கு உருவெடுத்துள்ளார்.
99 ஸ்பீட்மார்ட்டில் 83 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தியாம் வாவின் சொத்து மதிப்பு,
கடந்த ஆண்டு நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பட்டியலுக்குப் பிறகு உயர்ந்தது.
இந்தப் பட்டியல் முடிவுகள் தியாம் வாவை மலேசியாவின் ஏழாவது பணக்காரராக உயர்ந்துள்ளார்.
இதனிடையே 99 ஸ்பீட்மார்ட் தற்போது நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கிளைகளை இயக்குகிறது.
மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் 3,000 கிளைகளை அடைய இலக்கு வைத்துள்ளது.
அதே வேளையில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திற்கும் விரிவுபடுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
