நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் ரவி காலமானார்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் மரணத் தண்டனையை எதிர்த்து போராடிய முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி காலமானார்.

ரவியின் மரணம் இன்று அவரது சக ஊழியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது,

ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

56 வயதான ரவி  சிங்கப்பூரில் மரண தண்டனை கைதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளார்.

மேலும்  மரண தண்டனையை ஒழிப்பதற்காகப் பிரச்சாரம் செய்ததுள்ளார்.

1969 இல் பிறந்த ரவி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் பயிற்சி பெற்றார்.

1996 இல் வழக்கறிஞர் பதவிக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், கார்டிப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

அவர் 2019இல் சொந்தமாக M Ravi Law எனும் நிறுவனத்தை அமைத்தார்.

2023இல் ரவி சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

தலைமைச் சட்ட அதிகாரியும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றுவோரும் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக அவர் அடிப்படை இல்லாமல் குற்றஞ்சாட்டியதாகக் கூறப்பட்டது

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset