நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஏசிசி விசாரணை வளையத்தில் உள்ளார்: அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்ஏசிசி விசாரணை வளையத்தில் உள்ளார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டானஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

கோவிட்-19 தொற்றுக்கு முன்பு அரசாங்க அமைச்சரவையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஒருவர், இப்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சமீபத்திய விசாரணையின் மையமாக உள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பல ஊழல் வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முக்கிய தலைவர், ஒரு அமைச்சில்  பணியாற்றும் போது மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இப்போது விசாரணையின் ரேடாரில் உள்ளார்.

எம்ஏசிசியின் தற்போதைய விசாரணை, ஒரு மதிப்புமிக்க அரசாங்க நிலத்தை ஒரு முக்கிய சொத்து மேம்பாட்டாளருக்கு மாற்றுவது தொடர்பானது.

இந்த நடவடிக்கையில் ஊழல் மற்றும் முறைகேடு கூறுகள் உள்ளன என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட சமீபத்திய தகவல்களின்படி, முன்னாள் தலைவர் நீண்ட காலமாக அரசாங்கத்தில் பணியாற்றவில்லை என்றாலும் எம்ஏசிசி ஒரு விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய விசாரணைக் அறிக்கையை எம்ஏசிசி  திறந்துள்ளது.

விசாரணையில் உதவ பல முக்கிய நபர்கள் அழைக்கப்படுவார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset