செய்திகள் உலகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
SQ826 விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய்க்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தால் விமானம் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகி, அதிகாலை 3.01 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மன்னிப்பு கேட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:06 pm
ஹோர்முஸ் ஜலசந்தியில் சீன, ஈரானியக் கப்பல்களின் மர்மப் பயணம்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 13, 2026, 10:40 am
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
April 12, 2026, 6:08 pm
