செய்திகள் உலகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
SQ826 விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய்க்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தால் விமானம் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகி, அதிகாலை 3.01 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மன்னிப்பு கேட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 7:00 pm
அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த ஈரான் கடற்படையினர் தாயகம் அனுப்பப்படுகின்றனர்
March 13, 2026, 6:58 pm
ஈரானில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குச் உதவும் சீனா
March 13, 2026, 5:28 pm
உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை வேறுவழியின்றி நீக்கியது அமெரிக்கா
March 13, 2026, 11:11 am
மேற்கு ஈராக்கில் அமெரிக்க எரிபொருள் விமானம் விபத்து
March 12, 2026, 6:11 pm
வளைகுடா போரின் தாக்கம்: உலக எண்ணெய் விலை US$100 ஐ கடந்தது
March 12, 2026, 6:08 pm
அமெரிக்காவின் விசாரணை ‘அரசியல் தந்திரமா?’: சீனா குற்றச்சாட்டு
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
