செய்திகள் மலேசியா
நஜிப்பின் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டதை முழுமையாக ஆதரிக்கிறேன்: பிரதமர்
டாவோஸ்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டதை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
42 மில்லியன் ரிங்கிட் எஸ்ஆர்சி SRC வழக்கில் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நஜிப் ரசாக்கிற்கு எதிரான தண்டனைக் குறைக்கப்பட்டதை நான் வரவேற்கிறேன்.
நஜிப் சிறையில் என்னைப் போல துன்பப்படுவதை விரும்பவில்லை. நானும் அந்த நரகத்தையும், தனிமைச் சிறையையும் கடந்து வந்தேன்.
சிறைச்சாலை உணவைத் தவிர வேறு எந்த உணவும் எனக்குக் கொடுக்கப்படவில்லை.
ஆனால் நான் நஜிப்பை அதே வழியில் நடத்த வேண்டுமா? என்றால் அதை நான் ஆதரிக்க மாட்டேன் என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக 71 வயதான நஜிப் எஸ்ஆர்சி நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:54 pm