செய்திகள் உலகம்
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
தோக்கியோ:
ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் விமானிகள் இருவர் அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதை அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் இருவரும் 7 மாதங்களுக்கு விமானத்தை ஓட்ட முடியாது.
விமானத்தைச் செலுத்துவதற்கு முன் அவர்கள் அனுமதிக்கப்படும் அளவைவிட அதிகமாக மதுபானம் அருந்தியதாகவும் ஜப்பான் ஏர்லைன்ஸிடம் பொய் சொன்னதாகவும் அமைச்சு தெரிவித்தது.
விதிமுறைகளை அறிந்தும், விமானம் புறப்படவிருந்த 12 மணி நேரத்துக்கு முன்பு அவர்கள் அதிக அளவில் மதுபானம் குடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் மெல்பர்னிலிருந்து தோக்கியோவுக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் 3 மணி நேரம் தாமதமானது.
விமானிகள் இருவரும் அதிக அளவில் மதுபானம் அருந்தியது அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
2 மாதங்களுக்கு அவர்களுக்கு 30 விழுக்காடு குறைவான சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் அப்போது தெரிவித்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm