செய்திகள் மலேசியா
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
கோலாலம்பூர்:
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
1959 ஆம் ஆண்டு கல்வி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, தலைமை ஆசிரியர் அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியரால் மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்க முடியும்.
தற்போதுள்ள சட்ட விதிகள், பிரம்படி உள்ளிட்ட குற்றங்களைச் செய்யும் மாணவர்கள் மீது உடல் ரீதியான நடவடிக்கை எடுக்க பெற்றோருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதிகாரம் அளிக்கவில்லை.
மேலும் சிறப்பு சுற்றறிக்கை கடிதம் எண் 2இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, பொது இடங்களில் அல்லது பள்ளி ஒன்றுகூடல் இடங்களில் ஒருபோதும் பிரம்படி தண்டனை வழங்கப்படக்கூடாது.
அதே வேளையில் அத்தண்டனையை பெண் மாணவர்களுக்குப் பயன்படுத்த முடியாது.
கடுமையான குற்றங்களைச் செய்யும் மாணவர்கள் மீது விதிக்கப்படும் தண்டனைகளில் ஒன்று பிரம்படி.
ஆனால் இந்தத் தண்டனை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கம் கொண்டதல்ல.
மாறாக, மாணவர்களைப் புரிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டும், ஒழுங்குபடுத்தும் ஒரு கல்வி முறையாகச் செயல்படுகிறது என்று அவர் மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 1:25 pm
மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்பான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: லோக்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm