செய்திகள் மலேசியா
மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்ய கல்வியமைச்சு பரிந்துரை: ஃபட்லினா சிடேக் தகவல்
கோலாலம்பூர்:
மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் பரிந்துரையை மலேசிய கல்வி அமைச்சு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் கொண்டு வரும் என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்
புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த மடானி புத்தக பற்றுச்சீட்டு வழங்கும் திட்டம் 100 விழுக்காடு வெற்றிக்கரமாக அமைந்த நிலையில் இந்த பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது
பள்ளி மாணவர்களும் இல்லாமல் ஆசிரியர்களும் இந்த வசதிகளைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதாக அமைச்சர் கருத்துரைத்தார்
ஆக, மடானி புத்தக பற்றுச்சீட்டை ஆசிரியர்களுக்கு விரிவாக்கம் செய்யும் பரிந்துரை விவாதிக்கப்படும் என்று அமைச்சர் ஃபட்லினா சொன்னார்
50 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டு நான்காம் ஆண்டு முதல் அதற்கும் மேல் உள்ள மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் மடானி புத்தக பற்றுச்சீட்டு இடைநிலைப்பள்ளி மாணவர்கள், மெட்ரிகுலேஷன், ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 10:29 pm
கம்போங் ஜாவா லோட் வீடுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: பாதிக்கப்பட்ட மக்கள்
November 27, 2025, 10:14 pm
வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா
November 27, 2025, 3:38 pm
பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்
November 27, 2025, 3:37 pm
அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்கள்; மக்கள் ஏழைகள்: பிரதமர் காட்டம்
November 27, 2025, 1:49 pm
எச்ஆர்டி கோர்ப் விருதுகள் 2025; மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது: டத்தோ அஸ்மான்
November 27, 2025, 11:19 am
நான் இன அரசியலுக்கு எதிரானவன்: பிரதமர் அன்வார்
November 26, 2025, 12:33 pm
