செய்திகள் உலகம்
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
ஜெருசலேம்:
கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இதேத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்தார்.
பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீனர்கள் மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருவதாக காஸா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பர் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 15மாதங்களாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்திவரும் கொடூரத் தாக்குதலில் காஸாவில் 46,707 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 5:44 pm
கலிபோர்னியாவில் விரைவில் கடுமையான புயல், வெள்ளம் ஏற்படும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
December 25, 2025, 12:13 pm
முன்னாள் வழக்கறிஞர் M ரவியின் மர்ம மரணம்: அவருக்கு போதைப்பொருள் கொடுத்த நபர் கைது
December 23, 2025, 4:33 pm
கிறிஸ்துமஸை ஒட்டி சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
December 22, 2025, 8:32 am
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் கைது
December 20, 2025, 3:06 pm
வங்கதேசத்தில் வன்முறை: மாணவர் சங்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பதற்றம்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
