செய்திகள் உலகம்
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
ஜெருசலேம்:
கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இதேத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்தார்.
பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீனர்கள் மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருவதாக காஸா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பர் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 15மாதங்களாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்திவரும் கொடூரத் தாக்குதலில் காஸாவில் 46,707 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 10, 2025, 11:15 pm
கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு
November 10, 2025, 6:22 pm
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்குப் புதிய லெவி: $1இலிருந்து $41.60 வரை
November 10, 2025, 3:30 pm
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கொள்ளை: ஆடவர் கைது
November 9, 2025, 3:26 pm
அமெரிக்கா சந்தித்துள்ள மிக நீண்ட அரசாங்க முடக்கநிலை: 39ஆவது நாளாக தொடர்கிறது
November 9, 2025, 2:58 pm
உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது: ட்ரம்ப் அதிரடி உத்தரவு
November 8, 2025, 4:54 pm
ஜகர்த்தா பள்ளிவாசலில் வெடிப்பு: 54 பேர் காயம்
November 8, 2025, 8:49 am
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இன்று ரத்து
November 7, 2025, 12:42 pm
