
செய்திகள் உலகம்
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
ஜெருசலேம்:
கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த இஸ்ரேல் - காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி தெரிவித்தார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இதேத் தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவித்தார்.
பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், பாலஸ்தீனர்கள் மீதான வான் வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருவதாக காஸா பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 2023 நவம்பர் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் விடுவித்தது.
இஸ்ரேல் ராணுவம் கடந்த 15மாதங்களாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்திவரும் கொடூரத் தாக்குதலில் காஸாவில் 46,707 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm
ஜப்பானில் 100 வயதைத் தொட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 100,000
September 12, 2025, 9:16 pm
பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறை
September 12, 2025, 8:47 pm