நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரவாசி மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்

புவனேஸ்வர்:

18-ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டை மாண்புமிகு மோடி அவர்கள் தொடக்கி வைத்தார். 

புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகளைக் கொண்டாடும் வகையிலும் ஒரு மறக்க முடியாத நாளாகவும் இந்த மாநாடு அமைந்தது. 

புலம்பெயர் இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையாக பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது.

இந்தியப் புலம்பெயர்ந்தோர் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர். 

இது பெருமைப்பட வேண்டிய சாதனையாகும். ஆனால் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகிற்குத் தேவைப்படும் தொழில்சார் வல்லுனர்களை இந்தியா எப்படி பூர்த்தி செய்யும் என்பதை மோடி தமதுரையில் விளக்கினார். 

என்னைப் பொறுத்தவரையில் இது அறிவுபூர்வமான ஒரு பயணமாகும். 

இந்தப் பயணத்தில் வழி மலேசியாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். குறிப்பாக இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கம் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக இலக்கவியல் அமைச்சர் தெரிவித்தார்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset