
செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்: குணராஜ்
புத்ராஜெயா:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது.
இப்பள்ளி தொடர்பான சர்ச்சைகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரியை இன்று சந்தித்தோம்.
பள்ளி தொடர்பில் பல விவகாரங்கள் அவரிடம் பேசப்பட்டது. குறிப்பாக புதிய பள்ளி கட்டுவதற்கான முயற்சிகள் விவாதிக்கப்பட்டது.
புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு கிட்டத்தட்ட 24 மில்லியன் ரிங்கிட் செலவாகிறது.
குறிப்பாக பள்ளியை சொந்தமாக கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் அது தொடர்பில் கல்வியமைச்சுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.
ஆகவே இத் தமிழ்ப்பள்ளி பிரச்சினையை சர்ச்சையாக்காமல் புரிய பள்ளியை கட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிணைவோம் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm