செய்திகள் மலேசியா
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பொருளாதார வளர்ச்சி சிறந்த வேலை வாய்ப்புகள், நல்ல வருமானம், மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலமாக மாறுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைக்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பல்வேறு துறைகளில் தொழிலாளர் சந்தை நிலையானதாக உள்ளது.
இது அதிகரித்து வரும் ஊக்கமளிக்கும் பொருளாதார சூழ்நிலையால் ஆதரிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அடித்தளத்தை கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் மடானி அரசாங்கம் மேற்கொண்ட கடின உழைப்பின் விளைவாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 2025 நவம்பரில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.9% ஆகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 10:31 pm
சட்டத்தை மீறிய தைரியம்: காவல் நிலையத்துக்குள்ளேயே நடந்த கைகலப்பில் 5 பேர் கைது
March 4, 2026, 10:30 pm
3 வாரங்களில் RM 1 பில்லியன்: SARA மூலம் 1.25 கோடி மக்கள் பயன் பெற்றனர்
March 4, 2026, 5:13 pm
உரிமம் இன்றி இயங்கிய மர தொழிற்சாலைகள் மீது வனத்துறையின் அதிரடி சோதனை
March 4, 2026, 4:50 pm
பகாங் அரசு ஊழியர்களுக்கு 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி: வான் ரோஸ்டி
March 4, 2026, 4:49 pm
