செய்திகள் உலகம்
டாக்டர் பட்டம் சர்ச்சை: தனது பதவியை இராஜினாமா செய்தார் இலங்கை சபாநாயகர் அசோக ரன்வல
கொழும்பு:
கலாநிதி (டாக்டர்) பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அசோக்க ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த சில நாட்களாக என்னுடைய கல்வி அடைவு சம்பந்தமாக வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நான் எந்த இடத்திலும் பொய்யான தகவல்களை வழங்கவில்லை.
ஆனால், அந்த கல்வித்தகைமையை உறுதி செய்ய கூடிய ஆவணங்கள் என்னிடம் இல்லை. அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனவே அது இப்போதைக்கு கடினமான விடயம்.
எனக்கு பேராசிரியர் பட்டம் தந்த ஜப்பான் வசேதா பல்கலைகழகத்தோடு இணைந்த ஆவணங்களை என்னால் முன்வைக்க முடியும். அதனை நான் விரைவில் முன்வைப்பேன்.
ஆனால் எழுந்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்கள் நிர்கதிக்கு உள்ளாகாமல் இருக்க நான் ஏற்றுள்ள சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 11:43 am
10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்
April 26, 2026, 10:47 am
ஜப்பானில் பயங்கரம்: மனைவியைக் கொன்று மிருகக்காட்சிசாலையின் எரிமூட்டியில் வீசிய கணவன் கைது
April 25, 2026, 5:04 pm
கோடிகளில் திருடும் கிரிப்டோ மோசடி: பேராசை மனிதநேயத்தை விழுங்கிவிட்டதா?
April 24, 2026, 5:23 pm
2,700 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பூர்வகுடிகள்
April 24, 2026, 1:04 pm
தாய்லாந்தின் மெகா திட்டம்: 2 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் உருவாகிறது புதிய வர்த்தகப் பாதை
April 24, 2026, 12:37 pm
எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்
April 24, 2026, 9:47 am
