செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பெரிக்கத்தான் தேசியக் கூட்டணியின் தற்போது தனது உயர்மட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீண்டும் தேசியக் கூட்டணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங், கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தேசியக் கூட்டணியின் செயலாளராக பொறுபேற்றுள்ளார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம், கே.மணிமாறன் ஆகியோர் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm
மோசடி முதலீட்ட்டை நம்பி கணினி நிர்வாகி RM1,37,000 இழந்தார்
January 17, 2025, 2:05 pm