செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமனம்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவராக புனிதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பெரிக்கத்தான் தேசியக் கூட்டணியின் தற்போது தனது உயர்மட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீண்டும் தேசியக் கூட்டணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங், கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ், டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின், மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தேசியக் கூட்டணியின் செயலாளராக பொறுபேற்றுள்ளார்.
மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம், கே.மணிமாறன் ஆகியோர் உச்சமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 12:49 pm
அரசைக் கவிழ்க்க முயன்ற வழக்கு; மேலும் 14 பேர் விசாரணைக்கு உதவ அழைக்கப்படுவர்: ஐஜிபி
March 19, 2026, 12:48 pm
தமீம் டஹாரி புனித பூமியில் இருப்பதாக நம்பப்படுகிறது: ஐஜிபி
March 19, 2026, 11:27 am
ஆண் குழந்தை கொலை குற்றச்சாட்டைப் புரிந்து கொண்டதாக குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர் தலையசைந்தார்
March 19, 2026, 11:26 am
சுங்கை பூலோ மக்களுக்காக 8 லட்சம் ரிங்கிட் சம்பளம் நன்கொடை: டத்தோஶ்ரீ ரமணன் வழங்கினார்
March 19, 2026, 11:25 am
மேற்கு ஆசிய மோதல் பகுதிகளில் இருந்து மலேசியர்களை வெளியேற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது
March 19, 2026, 11:24 am
பாஸ் கட்சியைச் சந்தித்ததை பகாங் மஇகா மறுத்துள்ளது
March 19, 2026, 11:06 am
"ஒற்றுமையே பலம்": சிலாங்கூர் இளவரசரின் ஈகைத் திருநாள் வாழ்த்து
March 19, 2026, 10:46 am
பெர்சத்துவில் தொடர்ச்சியான மோதல்: பத்ருல் ஹிஷாம் கட்சியிலிருந்து நீக்கம்
March 19, 2026, 10:13 am
