செய்திகள் மலேசியா
இணையப்பகடிவதைக்கு எதிரான சட்டத்திருத்ததில் ஈஷாவுக்கு மரியாதை: நாட்டில் அதிகரித்து வரும் இணைய பகடிவதையைத் துடைத்தொழிக்க வழிவகுக்கும்
கோலாலம்பூர்:
இணையப்பகடிவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த ஈஷா எனப்படும் ராஜேஷ்வரி அப்பாவுவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக குற்றவியல் சட்டத்திருத்தத்தில் 507D(2) உட்பிரிவுக்கு ஈஷா பிரிவு ( ESHA CLAUSE) என பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த தகவலை பிரதமர் துறைக்கான சட்டம், கழக சீர்த்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒஸ்மான் கூறினார்.
ஈஷா சட்டப்பிரிவு என்பது பெயர் சட்டத்தைக் குறிக்கும் பெயராக மட்டுமல்ல; இணையப்பகடிவதையால் மரணமடைந்த நபருக்கு நியாயம் கிடைக்க செய்யும் வழிவகையாகும் என்று அமைச்சர் விவரித்தார்
மலேசியாவில் எதிர்காலத்தில் இணையப்பகடிவதை சம்பவத்தால் யாரும் உயிரிழக்கக்கூடாது. இதன் காரணமாக அரசாங்கம் இணைய பகடிவதைக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக, இணையப்பகடிவதை தொடர்பாக மக்களவையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
