
செய்திகள் மலேசியா
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
கோலாலம்பூர்:
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த சுமார் 27,000 அந்நிய நாட்டினர் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பட்ட அபராதத்தை மட்டும் கட்டினால் போதும்.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கிய திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது.
திட்டத்தின் மூலம் நாடு திரும்ப விரும்பி விண்ணப்பம் செய்தோர் மொத்தம் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அன்றாடம் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர் 300 முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது அல்லது விசா அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm