செய்திகள் இந்தியா
சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மின்சாரப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி
மும்பை:
மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர்.
மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அஃப்ரீன் ஷா (வயது19), அனம் ஷேக் (வயது 20), சிவம் கஷ்யப் (வயது 18) கனீஷ் கத்ரி (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தையடுத்து பேருந்து ஓட்டுநர் 50 வயதான சஞ்சய் மோர் கைது செய்யப்பட்டார். பேருந்தில் பிரேக் பிடிக்காததாலேயே விபத்து நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்களோ ஓட்டுநர் போதையில் இருந்தார். அவரால் பேருந்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலவில்லை. அதனாலேயே விபத்து நடந்தது என்று தெரிவித்துள்ளனர்.
பேருந்தை ஆய்வு செய்த ஆய்வாளர் பரத் ஜாதவும் பிரேக் சரியாக இருப்பதாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிவதாகக் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2026, 5:59 pm
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணம் திருட்டு: பண்ணை வீடு, கார் என ஆடம்பரமாக வாழ்ந்த ஊழியர்
June 29, 2026, 4:08 pm
ஜம்முவில் கனமழை, மண்சரிவால் சிக்கித்தவிக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்
June 29, 2026, 10:31 am
கைலாஷ்-மானசரோவா் யாத்ரிகா்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை
June 28, 2026, 4:04 pm
அயோத்தி ராமர் கோவிலைத் தொடர்ந்து மதுரா கிருஷ்ணர் கோயிலிலும் காணிக்கை திருட்டு
June 27, 2026, 7:02 pm
“மேற்கு வங்கத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்படும்”: முதல்வர் சுவேந்து அதிகாரி
June 26, 2026, 11:34 am
இந்திய பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
June 25, 2026, 3:00 pm
