செய்திகள் மலேசியா
சிலங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்துக்குள் நுழைகின்றன: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா ஆகியன அக்டோபர் 18 ஆம் தேதி தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்குள் நுழைகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
கிளந்தான், பேராக், பினாங்கு, சபா மற்றும் கெடா ஆகியவை ஒரே நாளில் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
"இந்த மாநிலங்கள் வெவ்வேறு கட்டங்களுக்கு நகரும் என்பதால், இதன் மூலம் திங்கட்கிழமை முதல் எந்த ஓரு மாநிலமும் மீட்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இருக்காது" என்று இஸ்மாயில் சப்ரி ஓர் அறிக்கையின்வழி தெளிவுபடுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக 10,000 க்கும் குறைவான தொற்று எண்ணிக்கை இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"அதனுடன் சேர்த்து, நேற்றைய நிலவரப்படி, பெரியவர்களுக்கு தடுப்பூசி விகிதம் முதல் தவணையாக 95 சதவிகிதமும் இரண்டாவது தவணை 91.2 சதவிகிதமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது."
பிரதமர் நாட்டில் பல கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ஒய்விடங்கள் செயல்பட அனுமதிக்கும், இ-ஹெயிலிங் வாகனங்கள் நாளை முதல் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.
வெளிநாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களாகவும், தடுப்பூசி போடாத பயணிகளுக்கு 10 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைப் பொறுத்தவரை, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏழு நாட்கள் மற்றும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
முன்னதாக கட்டாய தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக இருந்தது.
அது தவிர, மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில் உள்ள சைபர் கஃபேக்கள் 80 சதவிகித திறனுடனும், நான்காம் கட்டத்தில் உள்ளவை 100 சதவீதத்திலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
"உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார் பிரதமர்.
தேசிய மீட்புத் திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 3:55 pm
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது: டான்ஸ்ரீ நடராஜா
January 4, 2026, 3:53 pm
இரத்த தானம் மூலமாக பல உயிர்களை காப்பாற்ற முடியும்: சிவக்குமார்
January 4, 2026, 3:52 pm
மாணவர்களுக்கான கல்வி உதவி நிதிக்காக அரசாங்கம் 800 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: வோங்
January 4, 2026, 3:51 pm
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஜசெக மற்றவர்களின் வழியைப் பின்பற்றத் தேவையில்லை: அந்தோனி லோக்
January 4, 2026, 2:34 pm
நாய்கள் துரத்தியதால் லோரியில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்: மனைவி, குழந்தை படுகாயம்
January 4, 2026, 2:32 pm
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ, தேசிய முன்னணியின் நிலைப்பாட்டை உச்சமன்றம் தீர்மானிக்கும்: ஜம்ரி
January 4, 2026, 12:47 pm
சமகால சமூகத்தின் அறைகூவல்களை எதிர்கொள்வதில் அர்த்தமுள்ள வழிகாட்டுதல் தேவை: டத்தோ சிவக்குமார்
January 3, 2026, 11:55 pm
சீர்திருத்தத்திற்கு இனப் பிரச்சினைகள் முக்கிய சவால்: பிரதமர்
January 3, 2026, 11:54 pm
