செய்திகள் மலேசியா
சிலங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா தேசிய மீட்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்துக்குள் நுழைகின்றன: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா ஆகியன அக்டோபர் 18 ஆம் தேதி தேசிய மீட்புத் திட்டத்தின் (NRP) மூன்றாம் கட்டத்திலிருந்து நான்காவது கட்டத்திற்குள் நுழைகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.
கிளந்தான், பேராக், பினாங்கு, சபா மற்றும் கெடா ஆகியவை ஒரே நாளில் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
"இந்த மாநிலங்கள் வெவ்வேறு கட்டங்களுக்கு நகரும் என்பதால், இதன் மூலம் திங்கட்கிழமை முதல் எந்த ஓரு மாநிலமும் மீட்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இருக்காது" என்று இஸ்மாயில் சப்ரி ஓர் அறிக்கையின்வழி தெளிவுபடுத்தினார்.
கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக 10,000 க்கும் குறைவான தொற்று எண்ணிக்கை இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"அதனுடன் சேர்த்து, நேற்றைய நிலவரப்படி, பெரியவர்களுக்கு தடுப்பூசி விகிதம் முதல் தவணையாக 95 சதவிகிதமும் இரண்டாவது தவணை 91.2 சதவிகிதமும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது."
பிரதமர் நாட்டில் பல கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ஒய்விடங்கள் செயல்பட அனுமதிக்கும், இ-ஹெயிலிங் வாகனங்கள் நாளை முதல் கட்டுப்பாடுகள் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லலாம்.
வெளிநாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களாகவும், தடுப்பூசி போடாத பயணிகளுக்கு 10 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைப் பொறுத்தவரை, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் தடுப்பூசி போடப்படாத அல்லது ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ஏழு நாட்கள் மற்றும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
முன்னதாக கட்டாய தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களாக இருந்தது.
அது தவிர, மூன்றாம் கட்டத்தின் கீழ் உள்ள மாநிலங்களில் உள்ள சைபர் கஃபேக்கள் 80 சதவிகித திறனுடனும், நான்காம் கட்டத்தில் உள்ளவை 100 சதவீதத்திலும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
"உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார் பிரதமர்.
தேசிய மீட்புத் திட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதத்தின் அடிப்படையிலும் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
மெர்டேக்கா கோபுரம் 118 உலகின் மிகச் சிறந்த உயரமான கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
November 3, 2025, 10:11 pm
