
செய்திகள் இந்தியா
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
புது டெல்லி:
லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியை பிரதமர் மோடி உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் மேலும் கூறுகையில், இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபர் அதானி மீறியிருப்பது இப்போது வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவர் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதானியும் பிரதமரும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர்.
சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வர்களையே கைது செய்யும் மோடி அரசு, ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதானியை உடனடியாக கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 10:47 am
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm