செய்திகள் இந்தியா
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
புது டெல்லி:
லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியை பிரதமர் மோடி உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் மேலும் கூறுகையில், இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபர் அதானி மீறியிருப்பது இப்போது வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவர் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதானியும் பிரதமரும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர்.
சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வர்களையே கைது செய்யும் மோடி அரசு, ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதானியை உடனடியாக கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
