
செய்திகள் இந்தியா
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
புது டெல்லி:
லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியை பிரதமர் மோடி உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் மேலும் கூறுகையில், இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபர் அதானி மீறியிருப்பது இப்போது வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவர் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதானியும் பிரதமரும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர்.
சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வர்களையே கைது செய்யும் மோடி அரசு, ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதானியை உடனடியாக கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2025, 3:38 pm
சுற்றுப்பயணிகளிடம் மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
April 28, 2025, 4:24 pm
அதிகரித்துவரும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள்
April 28, 2025, 8:40 am
பெங்களூரு செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு
April 27, 2025, 10:01 pm
நோயாளிகள் உட்பட கண்ணீருடன் விடைபெற்று நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்
April 25, 2025, 12:07 am
பயங்கரவாதிகளை உலகத்தின் ஓரத்துக்கே விரட்டுவோம்: இந்தியப் பிரதமர் மோடி
April 25, 2025, 12:05 am
சிந்து நீர் தடை நடவடிக்கை கோழைத்தனமானது: இந்திய விமானம், வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் தடை
April 24, 2025, 6:11 pm
காஷ்மீர் தாக்குதல்: விமான டிக்கெட்டுகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்தது
April 24, 2025, 2:27 pm