
செய்திகள் இந்தியா
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
புது டெல்லி:
லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபர் கௌதம் அதானியை பிரதமர் மோடி உடனடியாக கைது செய்யாதது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
சூரிய மின்சக்தி கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள மாநில அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராகுல் மேலும் கூறுகையில், இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபர் அதானி மீறியிருப்பது இப்போது வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பி வருகின்றனர்.
அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவர் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதானியும் பிரதமரும் ஒன்று என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொண்டனர்.
சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வர்களையே கைது செய்யும் மோடி அரசு, ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடர்புடைய அதானியை உடனடியாக கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றார் ராகுல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm