செய்திகள் உலகம்
8 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வர 2,400க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி
சிங்கப்பூர்:
சிறப்புப் பயண ஏற்பாட்டின் கீழ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 8 நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் வர 2,400க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி வழங்கப்பட்ட பயணிகளில் சுமார் 40 விழுக்காட்டினர் பிரிட்டனில் இருந்து வருபவர்கள் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்தது.
மற்ற பயணிகள் கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லந்து, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அந்த 8 நாடுகளின் பயணிகளும் நேற்றிலிருந்து விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்றிரவு மணி 11.59 நிலவரப்படி, இதுவரை 2,409 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் அவர்கள் சிங்கப்பூருக்குள் வரலாம்.
ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளுடனும் சிங்கப்பூர் சிறப்புப் பயண ஏற்பாட்டை ஏற்கெனவே செய்துகொண்டுள்ளது.
அந்த நாடுகளைச் சேர்ந்த 5,228 பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அனுமதி கடந்த மாதம் 8ஆம் தேதிக்கும் அடுத்த மாதம் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்துக்கானது.
- CNA
தொடர்புடைய செய்திகள்
January 19, 2026, 3:41 pm
பெக்கான்பாருவில் ரோஹிங்கியா மக்கள் போராட்டம்: உதவித் தொகை அதிகரிக்க கோரிக்கை
January 19, 2026, 3:06 pm
மாட்ரிட் அருகே அதிவேக ரயில்கள் மோதல்: 21 பேர் பலி
January 18, 2026, 7:06 pm
காணாமல்போன இந்தோனேசியக் கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
January 16, 2026, 4:19 pm
ஹாங்காங் மாலில் கத்திமுனையில் மிரட்டல்: போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆடவர் பலி
January 15, 2026, 9:32 pm
எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரித்தம் சிங் நீக்கப்படுகிறார்: பிரதமர் வோங்
January 15, 2026, 9:24 pm
அமெரிக்கா தாக்கினால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் தாக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
January 15, 2026, 9:05 pm
150 ஆண்டுக்குப் பிறகு ஸ்பெயினின் மகாராணியாகிறார் லியோனர்
January 14, 2026, 4:58 pm
தாய்லாந்தில் பயணிகள் ரயில் மீது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் பலி
January 13, 2026, 2:54 pm
