
செய்திகள் மலேசியா
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மஇகாவின் பதாகைகளின் தமிழ் இல்லை என ஒரு சில கட்சிக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் ஆட்சியில் அமைச்சரவையில் ஒரு தமிழ் பேசும் அமைச்சரை அவர்கள் இழந்துவிட்டனர்.
அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாதது நமது அரசியல் வரலாற்றில் இது தான் முதல் முறையாகும்.
ஆக மஇகாவை குறை கூறுபவர்கள் இந்த விவகாரத்தை முதலில் சிந்திக்க வேண்டும்.
அதற்கு பின் மற்ற கட்சிகளை குறை கூறலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லின் மட்டும்தானா என ஆட்சேபங்கள் எழுந்துள்ளது.
ஆனால் இதறகு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது அவர்களின் நிலைப்பாடாகும்.
அதேவேளையில் கடந்த கால பட்ஜெட்டின் போது அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னென்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 10:44 pm
6,000 மாணவர்கள் இன்ஃப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்: பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன
October 13, 2025, 10:34 pm
தமிழ்நாடு அரசு வழங்கும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான NRT நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் 2025
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm