
செய்திகள் மலேசியா
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
மஇகாவின் பதாகைகளின் தமிழ் இல்லை என ஒரு சில கட்சிக்காரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், அவர்களின் ஆட்சியில் அமைச்சரவையில் ஒரு தமிழ் பேசும் அமைச்சரை அவர்கள் இழந்துவிட்டனர்.
அமைச்சரவையில் தமிழ் பேசும் அமைச்சர் இல்லாதது நமது அரசியல் வரலாற்றில் இது தான் முதல் முறையாகும்.
ஆக மஇகாவை குறை கூறுபவர்கள் இந்த விவகாரத்தை முதலில் சிந்திக்க வேண்டும்.
அதற்கு பின் மற்ற கட்சிகளை குறை கூறலாம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லின் மட்டும்தானா என ஆட்சேபங்கள் எழுந்துள்ளது.
ஆனால் இதறகு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அது அவர்களின் நிலைப்பாடாகும்.
அதேவேளையில் கடந்த கால பட்ஜெட்டின் போது அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னென்ன பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am