
செய்திகள் மலேசியா
சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டது: அமீர் ஹம்சா
கோலாலம்பூர்:
சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளத்தைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டு முதல் 2030-ஆம் ஆண்டு வரை தவணை முறையில் இந்தத் தளத்தைக் கட்டணம் செலுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
மலேசிய விமான நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 46 மில்லியன் ரிங்கிட் செலுத்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளம் மலேசிய விமான நிறுவனத்திற்கு கீழ் செயல்படுகின்றது.
2008-ஆம் ஆண்டில் மலேசிய விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, சிப்பாங் அனைத்துலகக் கார் பந்தயத் தளம் உட்பட முக்கிய அல்லாத வணிகங்களைக் கையகப்படுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 1:47 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; 100 அணிகள் பங்கேற்றுள்ளன: பத்துமலை
July 12, 2025, 12:18 pm
மலாக்காவில் ரிக்ஷா சேவைக்கு இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்
July 12, 2025, 11:28 am
இணைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
July 12, 2025, 10:52 am