செய்திகள் மலேசியா
வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது: அடுத்த மூன்று மாதங்களுக்கு மழை வெளுத்துக் கட்டும்
கோலாலம்பூர்:
அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மலேசியாவில் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை நவம்பர் தொடக்கம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad Helmi Abdullah) கூறியுள்ளார்.
மொத்தம் ஆறு தொகுதிகளாக மழைப்பொழிவு இருக்கும் என்றும், கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் கோடிகாட்டி உள்ளார். நவம்பர் முதல் ஜனவரி மாதத்துக்குள் ஆறு தொகுதி மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
![]()
"அச் சமயம் கிளந்தான், திரங்கானு, பகாங் மாநிலங்களில் டிசம்பர் மாதம் வரை அதிக மழை பெய்யும். இதேபோல் டிசம்பர் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஜோகூர், சபா, சரவாக்கில் அதிக மழை அளவு பதிவாகும்.
"தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் வீசும் வலுவான குளிர்காற்று வானிலையின் போக்கில் ஆதிக்கம் செலுத்தும். வடகிழக்கு பருவமழையானது இம்முறை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் அதிகளவு பெய்யும்.
"கிளந்தான், திரெங்கானுவில் சுமார் 450 மில்லிமீட்டர் தொடங்கி அதிகபட்சமாக 1,000 மில்லி அளவிலான மழை பெய்யக்கூடும். பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் சராசரி அளவில் மழையை எதிர்பார்க்கலாம்," என்றார் முஹம்மது ஹெல்மி அப்துல்லா.
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 5:49 pm
கனரக வாகனங்கள் விதிகளை பின்பற்றாததால் கோரமான விபத்துகள் நேர்கின்றன: டத்தோஸ்ரீ ஜனசந்திரன்
November 21, 2025, 5:47 pm
மகளை மீட்க பல ஆண்டுகளாக போராடி வரும் இந்திரா காந்திக்கு துணை நிற்போம்: குணராஜ்
November 21, 2025, 5:46 pm
பாலியில் நடைபெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் தாமான் டேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை
November 21, 2025, 12:23 pm
செண்டாயானில் வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் மீது 42 குற்றப் பதிவுகள் உள்ளன: போலிஸ்
November 21, 2025, 12:22 pm
கேமரன்மலைகளில் குடிநுழைவு அதிகாரிகள் அதிரடி சோதனை: 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது
November 21, 2025, 11:59 am
உள்ளூர் வேட்பாளர் ரெமிஸ்டா ஜிம்மி டெய்லரை மோயோக் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
November 21, 2025, 10:46 am
