
செய்திகள் மலேசியா
வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது: அடுத்த மூன்று மாதங்களுக்கு மழை வெளுத்துக் கட்டும்
கோலாலம்பூர்:
அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு மலேசியாவில் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை நவம்பர் தொடக்கம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறையின் தலைமை இயக்குநர் முஹம்மது ஹெல்மி அப்துல்லா (Muhammad Helmi Abdullah) கூறியுள்ளார்.
மொத்தம் ஆறு தொகுதிகளாக மழைப்பொழிவு இருக்கும் என்றும், கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் கோடிகாட்டி உள்ளார். நவம்பர் முதல் ஜனவரி மாதத்துக்குள் ஆறு தொகுதி மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
"அச் சமயம் கிளந்தான், திரங்கானு, பகாங் மாநிலங்களில் டிசம்பர் மாதம் வரை அதிக மழை பெய்யும். இதேபோல் டிசம்பர் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஜோகூர், சபா, சரவாக்கில் அதிக மழை அளவு பதிவாகும்.
"தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் வீசும் வலுவான குளிர்காற்று வானிலையின் போக்கில் ஆதிக்கம் செலுத்தும். வடகிழக்கு பருவமழையானது இம்முறை தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரையில் அதிகளவு பெய்யும்.
"கிளந்தான், திரெங்கானுவில் சுமார் 450 மில்லிமீட்டர் தொடங்கி அதிகபட்சமாக 1,000 மில்லி அளவிலான மழை பெய்யக்கூடும். பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் குறைந்தபட்சம் சராசரி அளவில் மழையை எதிர்பார்க்கலாம்," என்றார் முஹம்மது ஹெல்மி அப்துல்லா.
தொடர்புடைய செய்திகள்
October 22, 2025, 6:20 pm
கெஅடிலான் கட்சி பிரிவு கொள்கைகளை நிராகரிப்பதுடன் மடானி கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது: டத்தோஸ்ரீ ரமணன்
October 22, 2025, 5:48 pm
கூலிமில் நடந்த பட்டாசு வெடிப்பு விபத்துக்கு சட்டவிரோத வானவேடிக்கைகளே காரணம்: உள்துறை அமைச்சு
October 22, 2025, 5:18 pm
போக்குவரத்து சம்மன்கள்: அரசு இறுதியாக 70% வரை தள்ளுபடியை வழங்குகிறது
October 22, 2025, 4:30 pm
ஆசியான் உச்சி நிலை மாநாடு; டிரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசியா வருகிறார்: ஃபஹ்மி
October 22, 2025, 4:17 pm
மலேசிய தொழிலாளர்களுக்கு புதிய பயிற்சி தளத்தை மனிதவள அமைச்சு உருவாக்குகிறது: ஸ்டீவன் சிம்
October 22, 2025, 3:47 pm
இந்த வட்டாரத்தின் சிறந்த மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் : ஐஎல்ஓ இயக்குநர் பாராட்டு
October 22, 2025, 2:50 pm