செய்திகள் மலேசியா
6 வயதில் முதலாம் வகுப்பில் சேருவது கட்டாயமில்லை: ஃபட்லினா
புத்ராஜெயா:
ஆறு வயது குழந்தைகளை முதலாம் வகுப்பில் சேர்ப்பது கட்டாயமில்லை.
குறிப்பாக உளவியல், உணர்ச்சி ரீதியாக உண்மையிலேயே தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் மட்டுமே இதில் ஈடுபடுவார்கள்.
போதுமான தயார் நிலையில் இல்லாமல் குழந்தைகள் மிக விரைவாக பள்ளியில் சேர்க்கப்பட்டால், அவர்களின் ஆரம்பகால வளர்ச்சியில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கப்பட வேண்டும்.
இதன் அடிப்படையில் கல்வியமைச்சு மாணவர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
தயாராக இருக்கும் பெற்றோரை மட்டுமே நாங்கள் ஊக்குவிக்கிறோம். மிக முக்கியமாக குழந்தையே தயாராக இருக்க வேண்டும்.
குழந்தை மன ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இல்லை என்றால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்க நாங்கள் விரும்பவில்லை.
இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய கல்வித் திட்டம் 2026–2035 தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2026, 5:43 pm
பொன்னம்மாவின் வீட்டுக் கடன் பிரச்சினைக்கு தீர்வுக் காண வங்கிக்கு 5 நாட்கள் கெடு: டத்தோ கலைவாணர்
January 20, 2026, 4:50 pm
4ஆம் ஆண்டு, படிவம் 3 மாணவர்களுக்கு தேர்வு; அரசாங்கம் அறிமுகப்படுத்தும்: பிரதமர்
January 20, 2026, 4:49 pm
5 வயதில் பாலர் பள்ளி கல்வி; முதலாம் ஆண்டு வகுப்பு 6 வயதில் தொடங்கும்: பிரதமர் அறிவிப்பு
January 20, 2026, 1:59 pm
பாயான் லெபாஸில் ஜாலான் கென்யாலாங்கில் ஏற்பட்ட குழி : 6 நாட்களுக்கு பாதை மூடப்படுகிறது
January 20, 2026, 1:27 pm
தீயில் சிக்கிய 13 வயது சிறுவனை மீட்ட தீயணைப்பு படை
January 20, 2026, 12:03 pm
ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக போ லிங்கம் நியமனம்
January 20, 2026, 11:50 am
