செய்திகள் உலகம்
சிங்கப்பூர் அரசு அறிவிப்பு: 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வெளிநாடு சென்றுவர அனுமதி
சிங்கப்பூர்:
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு என அறிவிக்கப்பட்டுள்ள பயணத்தடத் திட்டத்தின்கீழ் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் பயணம் மேற்கொள்ளலாம் என சிங்கப்பூர் பொது விமானத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
அந்தக் குழந்தைகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனித்து பயணம் மேற்கொள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. பயணம் மேற்கொள்ள உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்யக்கூடிய, தகுதி பெற்ற பெரியவர்களுடன் இணைந்து பயணம் செய்ய இயலும் என அந்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்குமுன் 48 மணி நேரத்திற்குள்ளும் இங்கு வந்திறங்கியதும் அவர்கள் 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இச்சோதனை தேவையில்லை.
"தொடக்கத்தில் இந்தப் பயணத்தடத் திட்டத்தின்கீழ் 12 வயதிற்குக் குறைந்த பிள்ளைகள் பயணம் செய்ய அனுமதி தரப்படவில்லை. ஆனால், குடும்பத்தினர் அனைவருடனும் சிங்கப்பூரர்கள் பலர் வெளிநாடு செல்ல விரும்புவதால் அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது," என சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் குறிப்பிட்டதாக தமிழ்முரசு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 7:32 pm
பாலஸ்தீனத்தை ஐ.நா. உறுப்பு நாடாக்கும் தீர்மானம்: அமெரிக்கா ரத்து செய்தது
April 20, 2024, 1:41 pm
13 வயது சிறுமியின் திடீர் கர்ப்பத்தால் குழம்பிப் போயுள்ள மருத்துவர்கள்
April 20, 2024, 9:50 am
இலங்கைக்கு வருகிறார் ஈரான் அதிபர்
April 19, 2024, 11:16 am
ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் செய்த இஸ்ரேல்: போர் வெடிக்கும் அபாயம்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm