செய்திகள் உலகம்
வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்கத் தயாராகிறது தாய்லாந்து
பேங்காக்:
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளை, தனிமைப்படுத்தத் தேவையின்றி அனுமதிக்கத் திட்டமிடுவதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து கிருமித்தொற்று அபாயம் குறைவாக உள்ள குறைந்தது 10 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தாய்லந்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அவற்றுள் அடங்கும்.
முழுப் பட்டியல் குறித்து நாளை மறுநாள் முடிவெடுக்கப்படும் என்று அந்த அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து அந்தப் பட்டியல் மேலும் விரிவாக்கப்படும்.
தாய்லாந்து அதன் எல்லைகளை மீண்டும் திறப்பது, ஒரு சிறிய படியாக இருந்தாலும் முக்கியமான ஒன்று எனப் பிரதமர் பிராயுத் சான்-ஓச்சா (Prayuth Chan-ocha) குறிப்பிட்டார்.
ஆண்டிறுதி விடுமுறையில் செல்லும் பயணிகளை ஈர்க்கும் வாய்ப்பைத் தாய்லாந்து அரசாங்கம் இழக்க விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 11:28 am
பெற்ற பிள்ளைகளை குளிர்சாதன பெட்டியில் பூட்டி வைத்த தாய்: 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
March 29, 2026, 10:30 am
"உங்களுக்குப் பொருட்கள் கிடையாது": இஸ்ரேலியப் பயணியைப் புறக்கணித்த கம்போடியக் கடை ஊழியர்
March 29, 2026, 10:03 am
ஈரான் - அமெரிக்கா மோதல் உச்சம்: வளைகுடா நாடுகளிலுள்ள கல்வி வளாகங்களை விட்டு வெளியேற உத்தரவு
March 28, 2026, 7:28 pm
ஈரான் நடத்திய தாக்குதல்களில் கடந்த இரு வாரங்களில் 13 அமெரிக்க வீரர்கள் பலி: 303 பேர் படுகாயம்
March 28, 2026, 12:02 pm
ஈரானின் புஷ்ஹேர் அணு மின்நிலையம் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டது
March 28, 2026, 11:21 am
போக்கிமான் கடையில் இரத்தக் களரி
March 28, 2026, 10:28 am
நவீன வசதிகளுடன் ஒரு சிறிய சொர்க்கம்
March 27, 2026, 5:34 pm
