
செய்திகள் உலகம்
இரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நால்வர் பலி
டெஹ்ரான்:
இரான் தலைநகர் டெஹரானில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
கடந்த மாதம் இரான் 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வீசி இஸ்ரேல் மீது நடத்தி துல்லியத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
எனினும், இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை டெஹரானில் உள்ள வான்பாதுகாப்பு தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்தி வானில் அழித்ததாகவும் ஒரு சில மட்டும் காலி இடங்களில் விழுந்ததாக இரான் அறிவித்துள்ளது.
காஸா, லெபனான் என அண்டை நாடுகளில் இஸ்ரேல் கொடூர வான்வழித் தாக்குதலையும், ஹமாஸ்,ஹிஸ்பு அல்லா அமைப்பின் தலைவர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது.
இதற்கு பதிலடியாக இரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரானில் உள்ள அணுசக்தி மையங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்து வந்தது.
இதற்கு இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்கி வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தற்போது இல்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் 4 வீரர்கள் மாண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று இரான் எச்சரித்துள்ளது.
ஈரானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 10:31 pm
அமெரிக்க மேலாதிக்க, இனவெறியின் கோர முகமே ட்ரம்ப் விதித்த பயணத் தடை: ஈரான் கடும் கண...
June 7, 2025, 12:39 pm
தாய்லாந்திற்குள் மின்னியல் சிகரெட்டைக் கொண்டு சென்றால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வ...
June 6, 2025, 3:55 pm
யானைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைக் கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு செய்து...
June 6, 2025, 11:24 am
அதிபர் டிரம்ப்புக்கும் எலான் மஸ்க்கும் இடையே முற்றும் மோதல்: நன்றி கெட்ட டிரம்ப் ...
June 5, 2025, 5:16 pm
உக்ரைன் போரில் இரு தரப்பிலும் 3.5 லட்சம் வீரர்கள் மரணம்
June 5, 2025, 12:54 pm
12 நாடுகளிலிருந்து பயணிகள் அமெரிக்கா செல்ல தடை
June 4, 2025, 10:39 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் முஸ்லிம்கள் அரஃபா பெருவெளியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்
June 4, 2025, 12:53 pm
ஒவ்வொரு ஏழு நிமிடத்துக்கும் ஒரு தாய் உயிரிழக்கிறார் : நைஜீரியாவில் அச்சுறுத்தும் அ...
June 3, 2025, 10:37 pm
சீக்கிய பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது பாகிஸ்தான்: என்ன செய்யப் போகிறது இந்தியா?
June 3, 2025, 10:32 pm