
செய்திகள் உலகம்
இரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நால்வர் பலி
டெஹ்ரான்:
இரான் தலைநகர் டெஹரானில் இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
கடந்த மாதம் இரான் 200 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வீசி இஸ்ரேல் மீது நடத்தி துல்லியத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
எனினும், இஸ்ரேல் வீசிய ஏவுகணைகளை டெஹரானில் உள்ள வான்பாதுகாப்பு தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்தி வானில் அழித்ததாகவும் ஒரு சில மட்டும் காலி இடங்களில் விழுந்ததாக இரான் அறிவித்துள்ளது.
காஸா, லெபனான் என அண்டை நாடுகளில் இஸ்ரேல் கொடூர வான்வழித் தாக்குதலையும், ஹமாஸ்,ஹிஸ்பு அல்லா அமைப்பின் தலைவர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது.
இதற்கு பதிலடியாக இரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இரானில் உள்ள அணுசக்தி மையங்களை தாக்கப்போவதாக இஸ்ரேல் எச்சரித்து வந்தது.
இதற்கு இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்கி வரும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து தற்போது இல்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதில் 4 வீரர்கள் மாண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று இரான் எச்சரித்துள்ளது.
ஈரானுக்குத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:29 am
காசாவில் உள்ள அப்பாவி மக்களுக்காக கருணை காட்டுங்கள்: இஸ்ரேலுக்கு உலக சுகாதார நிறுவ...
May 23, 2025, 10:22 am
சிங்கப்பூர் விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி: போக்குவரத்து...
May 22, 2025, 10:01 pm
சிங்கப்பூரில் ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை முன்னிட்டு 5 விரைவுச்சாலைகளில் ERP கட்டண...
May 22, 2025, 7:31 pm
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 இஸ்ரேலியத் தூதரக ஊழியர்கள் மரணம்
May 22, 2025, 12:29 pm
எங்கள் குழந்தைகள் மெதுவாகச் சாகிறார்கள்: பலஸ்தீன பெற்றோர் கண்ணீர்
May 22, 2025, 12:17 pm
அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா செயலாள...
May 22, 2025, 12:10 pm
பாகிஸ்தான் வான் எல்லையில் இந்திய விமானங்கள் பறக்க மேலும் ஒரு மாதம் தடை
May 22, 2025, 10:10 am
1655 உயிர்களின் அழுக் குரலால் மௌனமானது சிலி: 65 ஆண்டுகள் கடந்தும் அச்சத்தில் மக்கள்
May 21, 2025, 10:37 pm
சிங்கப்பூர் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராக ஃபைஷல் இப்ரஹிம் நியமனம்: பிரதமர் வ...
May 21, 2025, 3:57 pm