நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகிஸ்தான் ஆடவர்  ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 8 பேர் கைது

ஜார்ஜ்டவுன்:

பாகிஸ்தான் ஆடவர்  ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் பெண் உட்பட 8 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

இங்குள்ள பூலாவ் திக்கோஸ் என்ற இடத்தில் உள்ள பழக்கடை ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் குத்திக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு பெண் உட்பட 8 பேரை போலிசார் கைது செய்தனர்.

22 முதல் 58 வயதுடைய அனைத்து சந்தேக நபர்களும் இன்று அதிகாலை மாநிலத்தில் பல தனித்தனி சோதனைகளில் கைது செய்யப்பட்டனர்.

வடகிழக்கு மாவட்ட போலிஸ்படையின் இடைக்காலத் தலைவர் லீ ஸ்வீ சேக் இதனை தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் பழக்கடையின் உரிமையாளர், ஊழியர்கள், பழக்கடைக்கு அருகில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் கடையின் உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset