நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து  ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்

கோலாலம்பூர்:

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

பிரிக்பீல்ட்ஸில் தீபாவளி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடைகள் அமைக்கப்பட்டது முதல் சர்ச்சையாக உள்ளது.

இப்பகுதியில் தீபாவளி கலை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தயாளன் ஸ்ரீ பாலன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இக்கலை நிகழ்ச்சியால் யாருக்கும் எந்த பாதிப்பு வராது. அதே வேளையில் யாருக்கும் இடையூராகவும் இருக்காது.

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் உணவு வழங்கப்படவுள்ளது. அன்பு இல்ல பிள்ளைகளுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளது.

ஆகையால் இக் கலை நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடத்தப்படும்.

குறிப்பாக இக்கலை நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்பதும் விரைவில் முடிவு செய்யப்படும் என்று தயாளன் ஸ்ரீ பாலன் கூறினார்.

இதனிடையே அங்கு திரண்டிருந்த வியாபாரிகள் இக்கலை நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

குறிப்பாக கலை நிகழ்ச்சி நடத்தி எங்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset