நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு கொடுக்காததால் முயல் இறந்தது: வியபாரி மீது குற்றம் சாட்டப்பட்டது

ஈப்போ:

வளர்ப்பு முயலுக்கு உணவளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாபாரி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

உணவு கொடுக்காததால் வளர்ப்பு முயல் இன்று கடந்த ஆண்டு இறந்து விட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் 43 வயதுடைய ஷைராஸி ஜமால் மீது வழக்கு தொடரப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு நீதிபதி அஸிசா அஹ்மத் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அந்த நபர் தனது இரண்டு முயல்களுக்கு உணவு, பானங்களை வழங்குவதில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவைகளில் ஒன்று இறந்துவிட்டன, மற்றொன்று மிகவும் மெல்லியதாக இருந்தது என குற்றம் சாட்டப்பட்டது.

இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் விசாரணை கோரியுள்ளார்.

அதே வேளையில் இந்த வழக்கு விசாரணை வரும் நவம்பர் 28ஆம் தேதி தொடரும் என நீதிபதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset