செய்திகள் மலேசியா
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியது என்று கூறிய தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூற்றைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
தான் நிதியமைச்சராக இருந்த இந்த மூன்றாண்டுகளில் நாட்டில் ஏழ்மை நிலையில் வாழும் 66.7 விழுக்காடு மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தேவைகளைச் செய்ததாகவும் பிரதமர் அன்வார் விளக்கினார்.
இன்னும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களைக் கண்டறிந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய மடானி அரசு முன் முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
2023-ஆம் ஆண்டின் இறுதியில் பிரதமர் அன்வார் நிர்வாகம் உறுதியளித்தபடி, ஏழ்மை நிலையை ஒழிக்க அரசாங்கம் தவறிவிட்டது என்று கூறிய ரந்தாவ் பன்ஜாங் ரந்தாவ் பன்ஜாங் சித்தி ஜைலா முஹம்மத் யூசோப்பின் கூற்றுக்குப் பிரதமர் அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும், வறுமையை ஒழிப்பதில் அரசாங்கம் இனப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கவில்லை. மாறாக, அனைத்து இன மக்களின் நலனும் கருத்தில் கொள்ளப்படும் என்று அன்வார் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am