நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாகிஸ்தான் ஆடவர்  ஸ்க்ரூடிரைவரால் குத்தி கொலை: பினாங்கில் சம்பவம்

ஜார்ஜ்டவுன்:

உள்ளூர் நபர் ஸ்க்ரூடிரைவரால் குத்தப்பட்டதால் நம்பப்படும்  பாகிஸ்தான் ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் பூலாவ் தீக்கோசில் உள்ள ஒரு பழக்கடையில் நடந்தது.

48 வயதான பாதிக்கப்பட்ட நபர் கடையில் இருந்து மதுபானங்களைத் திருட முயன்றதைக் கண்டுபிடித்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.


அந்த நபரின் செயலை வளாகத்தின் உரிமையாளர் கண்டித்த போது, அப்போது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பாதிக்கப்பட்டவரை திடீரென ஸ்க்ரூடிரைவரால் குத்தினார் என புரிகிறது.

ஒரு குத்து மார்பில் தாக்கப்பட்டதாகவும், மற்ற மூன்று குத்துகள் பலியானவரின் உடலின் பின்புறத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பாதிப்பட்டவர் சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அக்கிளினிக்கில் அவர் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset