நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னும் மர்மமாக உள்ளது

ஈப்போ:

ஈப்போவில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னும் மர்மமாக உள்ளது.

அதே வேளையில் இச்சம்பவம் முதல் முறை அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈப்போவில் நேற்று நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தால் வீடுகளும் கட்டிடங்களும் அதிர்ந்து போயின.

இந்த சம்பவம் குறித்து போலிசார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த நேரத்தில் ஏற்பட்ட சத்தம்,  நடுக்கம் இந்தோனேசியாவின் லபுஹாவில் (சுலவேசி) நிலநடுக்கத்துடன் தொடர்புடையது அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனால் இந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இன்னமும் மர்மமாக உள்ளது.

அதே வேளையில் இதுபோன்ற சம்பவம் ஈப்போவில் நடந்தது முதல் முறையல்ல.

ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset